Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

காக்கி சட்டை (2015) படத்தின் முன்னோட்டம் விமர்சனம்…!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடி மீண்டும் காக்கி சட்டை படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். காக்கி சட்டை படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. அதில், புழுதியைக் கிளப்பிக் கொண்டு வரும் ஜீப்பில் அடியாட்கள் சிலர் வருகிறார்கள்.

அந்த சாலையின் குறுக்கே சிவகார்த்திகேயன் தனது ராயல் என்பீல்ட் புல்லட்டில் ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கிறார். காக்கி பேன்ட் வெள்ளை சட்டையுடன் நிற்கும் சிவகார்த்திகேயனின் சட்டை சில இடி மின்னல்களுக்குப் பிறகு காக்கி சட்டையாக மெல்ல உருமாறுகிறது. அதுவரை சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் முகம் சட்டென சீரியஸ் முகமாக மாறுகிறது. ரசனையான கிராபிக்ஸ் வேலைகளில் ரொம்பவே ரசிக்க வைக்கிறது காக்கி சட்டை படத்தின் மோஷன் போஸ்டர்.


முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர சில அற்புதமான டிப்ஸ்!!!

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர். 

மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இன்டர்நெட்டில் தேடி அலைகின்றனர். இதனைப் படித்து அதன்படி பின்பற்றி உங்கள் முடியைப் பாதுகாத்திடுங்கள்.

குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களானது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். ஆண்களே! இதனை சரியாக பின்பற்றி வந்தால், தலை வழுக்கையாவதைத் தடுக்கலாம்.

முடியை ட்ரிம் செய்யவும் மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமையானது அதிகரிக்கும். எப்படியெனில் முடியானது வளரும் போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியமானது பாழாகிறது. இதனால் முடியின் வளர்ச்சியானது குறைய ஆரம்பிக்கிறது. ஆகவே மாதம் ஒருமுறை முடியை லேசாக ட்ரிம் செய்ய வேண்டும்.

ஆயில் மசாஜ் முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

முட்டை அவசியம் முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.

சீப்புகளை பயன்படுத்தவும் சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

ஹேர் ட்ரையரை தவிர்க்கவும் தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.

உருளைக்கிழங்கு மசாஜ் முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


நறுமணமிக்க எண்ணெய்கள் முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.

வெங்காயச் சாறு வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

பீர் வாஷ் மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வினிகர் வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

கண்டிஷனர் வேண்டாம் கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனரானது ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் தலைக்கு குளிக்குறீங்களா? சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். இப்படி தினமும் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களானது வெளியேறிவிடுவதோடு, முடியானது பொலிவை இழந்துவிடும். ஆகவே முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால் போதும்.

முடிக்கும் பாதுகாப்பு தேவை முடியின் மீது சூரியக்கதிர்களானது நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், சூரியக்கதிர்களானது மயிர்கால்களைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டா கொண்டு சுற்றிக் கொண்டோ செல்லுங்கள்.

ஈரமான முடியில் சீப்பு வேண்டாம் முடி ஈரமாக இருக்கும் போதோ, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும் போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால், முடியானது வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள்.

காட்டன் தலையணை உறை வேண்டாமே! காட்டன் தலையணை உறையைப் பயன்படுத்தினால், முடி அதிகம் உதிரும். ஆகவே சில்க் தலையணை உறையைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.
மன அழுத்தத்தைத் தவிருங்கள் தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.

சரியாக சாப்பிடவும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

போதிய தூக்கம் அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

வடக்கு தமிழர்களின் 7 லட்சம் வாக்குகளுக்கு மஹிந்தரும் மைத்திரியும் வலை விரிப்பு!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை நிச்சயிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவும், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் மும்முரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு மாகாணம் விளங்குமெனக் கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடைவிதித்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளையும் பெற்றனர். அதன் பிரகாரம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகள் வித்தியாசத்திலேயே மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார். 

இம்முறை வடக்கு மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 477 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும், மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூளை பக்கவாதம் இருந்தால் ஏற்படக்கூடிய முக்கிய 8 அறிகுறிகள் !

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளினால் மூளையின் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் நிலையே மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. 

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்: 

இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதான இஸ்கீமியா என்றழைக்கப்படும் நிலையினாலோ அல்லது இரத்த ஒழுக்கினாலோ மூளை பக்கவாதம் ஏற்படக்கூடும். ஆனால் சாமான்ய மக்கள், மூளை பக்கவாதம் என்றால் என்ன என்றோ, அதன் வெளிப்பாடுகள் பற்றிய தெளிவோ, அதற்கான உடனடி சிகிச்சைககள் பற்றியோ, இதனால் பாதிக்கப்பட்டோரை இதிலிருந்து மீட்பது எப்படி என்பது பற்றியோ பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை. 

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக கொழுப்புச்சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக முக்கிய அபாயகரமான காரணிகளாக விளங்குகின்றன. இங்கு அந்த மூளை பக்கவாதத்தின் சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

முகச் சாய்வு: நோயாளியின் முகம் ஒரு பக்கமாக சாய்ந்து காணப்பட்டாலோ அல்லது முகத்தின் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்று உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். இதற்கிடையில், நோயாளியை புன்னகைக்கச் சொல்ல வேண்டும். ஒருவேளை அவரால் சரியாக புன்னகைக்க இயலவில்லையெனில், தாமதிக்காது மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும்.

கைகள் வலுவிழத்தல்: பக்கவாத நோயாளி, தன் ஒரு கையோ அல்லது இரு கைகளுமோ மரத்துப் போய் விட்டது போன்றோ அல்லது வலுவிழந்தது போன்றோ உணர்வார். அந்நேரத்தில் அவரது கையை உயர்த்திச் சொல்லிப் பாருங்கள். அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது கை கீழ் நோக்கி விழுவதைக் காணலாம்.

பேசுவதற்கு சிரமப்படுதல்: பக்கவாதத்தினால் பாதிக்கப்படும் போது நோயாளிகளின் பேச்சு குழறுவதைக் காணலாம். சுலபமான கேள்விகள் சிலவற்றை கேளுங்கள்; பொதுவாக அவர்களால் சரியாக பதிலளிக்க முடியாது. அதனால் அவர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள, மீண்டும் மீண்டும் அவர்களை பதிலளிக்கச் சொல்லி சோதித்துப் பாருங்கள்.

சமன்பாட்டை இழத்தல்: பக்கவாத நோயாளிகள் அவர்களது உடலின் சமன்பாட்டை இழந்து, சிறு அசைவுக்கும் சிரமப்படுவதோடு, ஒருங்கிசைவு இன்றியும் அவதிப்படுவர்.


குடையும் தலைவலி: காரணம் ஏதுமின்றி, ஒருவர் திடீரென தாங்கவியலாத தலைவலியால் அவதிப்படுவாராயின், அது பெரும்பாலும் இரத்த ஒழுங்கினால் உண்டாகக்கூடிய பக்கவாதத்தின் அறிகுறியாகவே இருக்கும்.

குறைந்த கால நினைவிழப்பு: நினைவிழத்தலினால் நோயாளி பெரும் அவதிக்குள்ளாவார். குறைந்த கால அவகாசத்திற்குள்ளாகவே, சற்று முன் நிகழ்ந்த எதையும் அவர்களால் நினைவில் நிறுத்திக் கொள்ள இயலாது.

பார்வைக் கோளாறு: திடீரென பார்வை இருளடைதல் அல்லது பார்வைக் கோளாறுகள் போன்றவையும் மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் தான்.

தலைசுற்றல்/சமநிலை இழத்தல்: மூளை பக்கவாதம், ஒருவர் தன் சமன்பாட்டை இழக்கும் படி செய்யும். இதனார் பாதிக்கப்பட்ட ஒருவர் தகுந்த காரணம் ஏதுமின்றி தன் உடலின் சமநிலையை இழக்க நேரிடும்.

எமி ஜாக்ஸனின் நிர்வாணப் படம் வெளியானது

ஐ படத்தின் நாயகி எமி ஜாக்ஸனின் டாப்லெஸ் படங்கள் வெளியானதில் அதிர்ந்து போயுள்ளார் இயக்குநர் ஷங்கர். மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து அவர் தாண்டவம் படத்தில் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ஐ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்திலும் நடிக்கிறார்.

10 வருடங்களில் 9 குழந்தைகளை பெற்று 87 மாதங்கள் கர்ப்பிணியாக இருந்த 'சூப்பர் மம்மி'


இலங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்தவர் ஜேசன் (வயது 41) இவரது மனைவி தோனியா (வயது 40). இந்த தம்பதியினருக்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. தோனியா 10 வருடங்களில் 9 குழந்தைகளை பெற்று அவர்களை பாதுகாப்பாக வளர்த்துவரும் 'சூப்பர் மம்மி'யாக திகழ்கிறார். தோனியா சுமார் 7 வருடங்களுக்கு மேலாக (87 மாதங்கள்) கர்ப்பமாகவே இருந்துள்ளார். தோனியாவின் முதல் குழந்தைக்கு வயது 12 அவருடையை, கடைசி குழந்தைக்கு வயது 2 ஆகும். என்னுடைய 9 குழந்தைகளையும் பார்க்கும்போது எல்லாம் மகிழ்ச்சி அடையும் மற்றவர்கள் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று நினைக்கிறார்கள் ஆனால் நான் சமையல் அறையில் சுறுசுறுப்பாக வேலை செய்து எனது குழந்தைகளை கவனித்து வருகின்றேன் என்று தோனியா கூறியுள்ளார். 

தோனியாவை பிறந்தநாள் விழாவில் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன் அவரை கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் இருவரும் இல்லறவாழ்க்கையை தொடங்கியுள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாகவே அவரது திருமண வாழ்க்கை செல்வதாக தோனியா கூறியுள்ளார். எனக்கு 9 குழந்தைகள் உள்ளதால் எனது கணவருக்கு வேறுவேலையே இல்லையா? என்று மற்றவர்கள் அவரை வெளிப்படையாகவே கிண்டல் செய்வார்கள். இதனால் அவர் கோபம அடைவார். ஆனால் அவர் எங்களையும் கவனித்துக் கொண்டு வேலையையும் சிறப்பாக செய்து வருகிறார். மிகவும் கடிணமாக உழைக்கும் அவர் எங்களையும் மிகவும் அதிகமாக நேசிக்கிறார். இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கடிணம் ஆனால் அவர் மிகவும் நன்றாக செயல்படுவார். நாங்கள் ஒரு நல்ல குழுவை உருவாக்கியுள்ளாம். என்று புன்னகைத்து கொண்டே தானியா கூறியுள்ளார். ஜேசன் சொந்தமாக ஒரு தச்சு தொழில் செய்து வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் 7 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் மற்றும் தொழிலை ஜேசன் கவனித்து வருகிறார்.  

பெரிய குடும்பத்திற்காக நாங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை. முதல் குழந்தையை வயிற்றில் சுமந்த தோனியாவிற்கு அது நிலைக்கவில்லை. தோனியா 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருடையை குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவருடைய கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. குழந்தையை தோனியாவிடம் டாக்டர்கள் காட்டவே இல்லை. தனது முதல் குழந்தையை இழந்த தோனியா துடித்துவிட்டார். இதனை அடுத்து அவருக்கு குழந்தை மீதான பாசம் அதிகரித்துவிட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லவில்லை. 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களுக்கு குழந்தை பிறந்தது. வீட்டில் வைத்தே தோனியாவிற்கு குழந்தை பிறந்ததுள்ளது. 

அடுத்த 12 மாதங்கள் கழித்து 2002 அக்டோபர் மாதம் 14ம் தேதி அவர்களுக்கு மற்றொரு குழந்தை பிறந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் 2003 மற்றும் 2004ம் ஆண்டுகளில் அக்டோபர் மாதம் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவர்களுடைய குழந்தைகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.  தான் திருமணம் ஆனதில் இருந்தே கர்ப்பமாகவே இருந்தேன். நான் கர்ப்பமாக இருப்பதை மிகவும் விரும்புகிறேன். என்று தோனியா சிறித்து கொண்டே கூறியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு தங்களது குழந்தைகள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்ததை அடுத்து தோனியா குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொண்டார். தோனியாவிற்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து நிறுத்திக் கொண்டுள்ளனர். 

அவர்களது உணவு செலவுக்கு மட்டும் வாரம் 300 பவுண்ட்களுக்கு மேலும் செலவு செய்வதாகவும், குழந்தைகளை நல்லபடியாக கவனித்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருவதாக தோனியா கூறியுள்ளார். 

சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் வாலிபர்கள் வெறிச்செயல்

மத்திய பிரதேச மாநிலத்தில் மைனர் பெண் ஒருவர் அடையாளம் தெரிந்த வாலிபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அந்த வாலிபரின் நண்பர்கள் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 

லாசுதியா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின்படி வாலிபர்கள் ராஜ்(வயது 20), தீபெஷ் (வயது 21) ரிதிஷ்(வயது 22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை மறித்த வாலிபர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு மறுத்த சிறுமி பின்னர் சென்றுள்ளார். 

அப்போது தீபெஷ் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளான். சிறுமியை அவன் கற்பழித்துள்ளான். அதனை மற்ற வாலிபர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இதனை வெளியே கூறினால் வீடியோவை இணையதளத்தில் பரவ விட்டுவிடுவேன் என்று வாலிபர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து மாணவியை தொந்தரவு செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ரூ. 50 ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் இணையதளத்தில் பரவ செய்வேன் என்று ரிதிஷ் சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளான். பின்னர் சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

மருமகள்- மாமனார் கள்ள உறவு பதவியை இழந்த கணவன்

அமெரிக்காவின் மோப் நகரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் டிம்தி ஜான்பிரிவர் (வயது 33) இவரது மனைவி லோகன்  இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

டிம்தியின் தந்தை வோல்ஸி கோர்கி (வயது 63) தீயணைப்புன் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஜூலை மாதம் தனது படுக்கையறையில் மனைவியும், தந்தை வோல்ஸி கோர்கியும்  செக்ஸ் உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்து டிம்தி அதிர்ச்சியுற்றார். இதனால் ஆத்திரமடைந்த டிம்தி தந்தையை தாக்கினார் இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தந்தையை தாக்கிய டிம்தி குறித்து  11 பேர் கொண்ட விசாரணை போலீஸ் கமிஷன் குழு  விசாரணை செய்தது. அவரை போலீஸ் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என 6 பேர்களும், மன்னித்து விட்டுவிடலாம என 5 பேர்களும் வாக்களித்தனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தனது பதவியை இழந்தார். இருப்பினும் சஸ்பெண்ட் காலமான 4 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் பணியில் சேரலாம் என அவருக்கு போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர்.

இதுதான் தன்னுடைய வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று கூறிய டிம்தி தனது 65 வயது தந்தையும்  தனது மனைவி லோகனும்   தனக்கு துரோகம் செய்வார்கள் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். 
 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger