மெரிக்காவில் 10 வயது சிறுமியை, 8 வயது சிறுவன் பாலியல் தாக்குதல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 10 வயது சிறுமியை கழிப்பறையில் வைத்து 8 வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரி ஆகிய இருவரும் சேர்ந்து கொடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அச்சிறுமியின் உடல்களில், மோசமான தாக்குதல்களை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், தனது மகளை பள்ளியில் இருந்து கூட்டி வருவதற்காக சென்ற போது மகள் அழுது கொண்டே ஓடி வந்ததாகவும், நடுங்கி கொண்டே கழிப்பறையில் நடந்தவற்றை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், தனது மகளை பள்ளியில் இருந்து கூட்டி வருவதற்காக சென்ற போது மகள் அழுது கொண்டே ஓடி வந்ததாகவும், நடுங்கி கொண்டே கழிப்பறையில் நடந்தவற்றை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் குழந்தைகளை பாதுகாக்க தவறிய ஆசிரியர்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனையில் அச்சிறுமியை பரிசோதனை செய்த போது, அவரது உடலில் பாலியல் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் தெரியவந்துள்ளது.

Post a Comment