Headlines News :
Home » » இளம் சகோதரிகளை கற்பழித்த பாதிரியார் கைது, உ பி யில் தொடரும் பாலியல் வன்முறைகள்

இளம் சகோதரிகளை கற்பழித்த பாதிரியார் கைது, உ பி யில் தொடரும் பாலியல் வன்முறைகள்

Written By Unknown on Saturday, June 7, 2014 | 9:44 PM

உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்வதற்காக ரூர்கி பகுதியில் இருந்து இரண்டு இளம் வயது சகோதரிகளை அழைத்து வந்தார்.

சமீபத்தில், ரூர்கியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த இளைய சகோதரி, அந்த பாதிரியார் தன்னையும் அக்காவையும் மிரட்டி கற்பழித்து விட்டதாக தாயாரிடம் தெரிவித்தார். மேலும், பாதிரியாரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் தங்களை அடுத்தடுத்து கற்பழித்ததாகவும் அந்த பெண் கூறியதையடுத்து, அவரது தாயார் இது தொடர்பாக ரூர்கி போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சஹரன்பூர் மாவட்டத்துக்கு விரைந்து சென்ற ரூர்கி போலீசார், பாதிரியாரின் வீட்டில் இருந்த மூத்த சகோதரியை மீட்டனர். இளம்பெண்களை அடைத்து வைத்து கற்பழித்த குற்றச்சாட்டின் கீழ் பாதிரியாரை கைது செய்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சதார் பசார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருக்கும் பாதிரியாரின் மகன் மற்றும் அவரது நண்பர்களை சதார் பசார் போலீசார் தேடி வருகின்றனர். 
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger