Headlines News :
Home » » ஒரு மாதமாக செக்ஸ் அடிமையாக வைக்கப்பட்ட சிறுமி மீட்பு

ஒரு மாதமாக செக்ஸ் அடிமையாக வைக்கப்பட்ட சிறுமி மீட்பு

Written By Unknown on Thursday, June 12, 2014 | 10:42 AM

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. தன்னை ஒரு மாதமாக அவரது வீட்டில் அடைத்து வைத்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்று தலித் சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டம் இஸ்லாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ஒருவர் மாயமான ஒரு மாதம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், டாக்சி டிரைவர் ஒருவர் என்னை கடத்தி டெல்லிக்கு கொண்டு சென்றார். அந்த டிரைவரும், அவரது ஆட்களும் என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதன் பிறகு அவர்கள் பாப்ரலாவில் உள்ள சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு என்னை அழைத்து வந்தனர். அங்கும் என்னை பலமுறை பலர் பலாத்காரம் செய்தனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் உன் குடும்பத்தை அழித்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். போலீசார் என்னை எம்.எல்.ஏ.வின் வீட்டில் இருந்து மீட்டனர் என்றார். 

போலீசாரோ சிறுமியையும், டிரைவரையும் பதாவ்ன் ரோட்வேஸ் பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.வுக்கு பங்கு இருப்பதால் போலீசார் மெதுவாக செயல்படுவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கடத்தப்பட்ட பதாவ்ன் மாவட்டத்தில் தான் கடந்த மாதம் 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டதால் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger