Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label சமந்தா. Show all posts
Showing posts with label சமந்தா. Show all posts

சமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்டமாக கோவா செல்ல உள்ளனர்.


v4t_Samantha


மும்பையில் சூர்யா நடிக்கும் ஒரு பாடல் காட்சி ரூ.80 செலவில் அமைக்கப்பட்ட ஒரு செட்டில் வைத்து எடுக்கப்படுகிறது. அந்த பிரமாண்டமான செட்டில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே பாடல்காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த பாடலுக்கான நடனத்தை ராஜு சுந்தரம் அமைத்தார்.யுவன்ஷங்கர்ராஜாவின் இசையமைப்பில் சூர்யாவின் அறிமுகப்பாடல்தான் இங்கு படமாக்கப்பாட்டுள்ளது. ரஞ்சித் இந்த பாடலை பாடியுள்ளார்.


இந்த பாடலுக்கு சூர்யாவும், சமந்தாவும் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டம் போட்டார்கள். சமந்தா படப்பிடிப்புக்கு வரும்போது கையோடு ஒரு டாக்டரையும் அழைத்து வந்துள்ளாராம். தற்போது தோல் நோயினால் அவதிப்பட்டு வரும் சமந்தாவை உடனுக்குடன் செக்கப் செய்ய இந்த டாக்டர்தான் உதவுகிறாராம்.

மும்பையில் உள்ள இந்த டாக்டர் சூர்யாவின் பள்ளித்தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஆலோசனையின் பேரில்தான் சமந்தா, இந்த டாக்டரை உடன்வைத்துக்கொள்கிறாராம். மும்பையில் படப்பிடிப்பு முடியும் வரை இந்த டாக்டர் சமந்தாவை அருகில் இருந்து கவனித்துக்கொள்வார் என தெரிகிறது.

மகேஷ்பாபு,சமந்தா ரசிகர்களிடயே மோதல்

An Indian policeman uses a bamboo stick

தெலுங்கு சினிமாவில் அனுஷ்கா,தமன்னா, அஞ்சலி உள்பட பல கவர்ச்சிப்புயல்கள் களத்தில் நின்றபோதும், சமந்தாவை யாராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனை முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், மிதமான கிளாமரை வெளிப்படுத்தி மட்டுமே நடித்து வரும் சமந்தாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்களாம்.


இந்நிலையில், அவர் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது கட்அவுட்கள் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம் சமந்தாவின் விசுவாசத்திற்குரிய ரசிகர்கள். அங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக சமந்தாவுக்கும் ராட்சத கட்அவுட்களை தியேட்டர்கள் மட்டுமின்றி, நகரத்தின் முக்கிய சாலைகளிலும் வைக்கிறார்களாம்.


அப்படி சமீபத்தில் ஆந்திராவிலுள்ள ஒரு முக்கிய ஏரியாவில் மகேஷ்பாபுவின் கட்அவுட் வைக்கயிருந்த இடத்தில் சமந்தாவின் கட்அவுட்டை அவரது ரசிரக்கள் வைத்து விட்டார்களாம். இதனால், இரண்டுதரப்பு ரசிகர்களும் கட்டிப்புடி சண்டையில் உருண்டார்களாம். அதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்ததோடு, அந்த பகுதியில் எந்த சினிமா நடிகர்-நடிகைகளின் கட்அவுட்களையும் வைக்கக்கூடாது என்றும் ஆர்டர் போட்டு விட்டார்களாம்.

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger