உலக கோப்பை கால்பந்து போட்டி துவக்கவிழா இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இதன் போட்டிகளை பார்தது ரசிக்க கோவா அமைச்சர்கள் 3 பேர், எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் உள்பட 6 பேர் அரசு செலவில் புறப்படவுள்ளனர். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில் கோவாவில் பா.ஜ., ஆளும் கட்சியாக உள்ளது. இங்கு முதல்வர் மனோகர் பாரிக்கர் முதல்வராகவுள்ளார். 3 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட குழுவினர், ஜுலை மாதம் நடக்கும் கால்இறுதி , அரை இறுதி மற்றும் பைனல் போட்டியை காண புறப்படுகின்றனர். ரியோடிஜெனிரோ செல்ல இதற்கு ரூ. 89 லட்சம் செலவாகும் என தெரிகிறது. இதற்கு அரசு பணத்தை செலவழிக்கலாமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு இதனை நிறுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.
இது குறித்து கோவா அமைச்சர் பர்டோடா கூறுகையில், நான் ஒரு கால்பந்து வீரர். அத்தோடு மட்டுமல்ல, பிரேசிலில் அந்நாட்டு ஏற்பாடுகள், மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவே புறப்படுகிறோம். இது எங்களுக்கு ஒரு படிப்பினையை தரும் என்று கூறியுள்ளார்.

Post a Comment