
உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தும் தொலைபேசி

ஒரெஞ்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கலர்ஸ் போ ஒரெஞ்ச் கையடக்க தொலைபேசி
இலங்கை மின் உதிரிப்பாகம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகிய துறைகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள நாட்டின் முன்னிலை மின் உதிரிப்பாக நிறுவனமான ஒரெஞ்ச் முதற்தடவையாக அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கையடக்க தொலைபேசிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹொங்கொங்கில் அமைந்துள்ள டெலி டோக் நிறுவனத்துடன் இணைந்து ஒரெஞ்ச் நிறுவனம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் அதற்கான வைபவம் கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
“ எமது நிறுவனம்் டெலி டோக் நிறுவனத்துடன் இணைந்து கையடக்க தொலைபேசிகளை மாத்திரமன்றி மின் உதிரிப்பாகங்களையும் எதிர்காலத்தில் உற்பத்தி செய்யும். கையடக்க தொலைபேசி, மின் உதிரிப்பாகம் ஆகிய இரண்டு துறைகளையும் ஒரே துறையாக மாற்றுவதே எமது நோக்கம்” என ஒரெல் கோப்பரேஷன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு தெரிவித்தார்.
கலர் போ ஒரெஞ்ச் கையடக்க தொலைபேசிகள் X40, X 200, F 3, F 2, X110 ஆகிய வடிவங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மின்சாரமுள்ள வீடுகளிலுள்ள மின் உபகரணங்களை கையடக்க தொலைபேசி ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய புதிய அப் (App) ஒன்றையும் தமது நிறுவனம் தயாரித்துள்ளதாக ஒரெஞ்ச் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி பிரிவின் பொது முகாமையாளர் கிஹான் சிகேரா தெரிவித்துள்ளார்.
பாவனையாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய உற்பத்தி செய்யப்பட்டுள்ள புதிய அப் மூலம் மின்சார குமிழ்களின் வெளிச்சத்தை குறைத்தல், மின்குமிழ்களை எரிய வைத்தல், அணைத்தல், அலாரத்துக்கு அமைய மின் உபகரணங்களை எரியவிடுதல், வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் மின்குமிழ்கள் தானாக ஒளிர்வது உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இதன்மூலம் மேற்கொள்ளலாம்
Huaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்டத்தை அறிமுகம் செய்யும் மொபிடெல்
ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தடவையாக நாட்டில் அறிமுகம் செய்யும் சேவைகள் வரிசையில்் இம்முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்துள்ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய ஒப்பந்த திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொபிடெல் வாடிக்கையாளர்கள் இதற்கென 18 மாத கால ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் விஷேட பாவனைக்குப் பிந்திய மொபிடெல் கட்டண முறையொன்றுடன் கூடியது. மாதாந்த அடிப்படையில் பின்வரும் உள்ளம்சங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 2GB டேடா, 100 M2M நிமிடங்கள் மற்றும் 500 M2M குறுந்தகவல்கள் போன்றன வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் போது, ஆரம்பக் கட்டணமாக ரூபா 10,000/- வைச் செலுத்த வேண்டும்.
ஒப்பந்த கால முடிவில் வாடிக்கையாளர் புதிய ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Huawei Ascend Y220 ஸ்மார்ட் போன் இரட்டை SIM பாவனை கொண்டது. 3.5 அங்குல தொடுகை திரை, 0.3MP சக்தி கொண்ட பின் பக்க கெமறா மற்றும்் RAM 256MB அதி உயர் நினைவாற்றல், 512 MB ROM, நுண் SD கார்ட், (32G வரை) எனபன போன்ற பண்புகளோடு கறுப்பு நிறத்தில் கிடைக்கின்றது.
அசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.
மொபைல் உலகில் மிக குறுகிய காலத்தில் சாம்சங்கின் முக்கிய போட்டியாளராக வந்துவிட்டது லினோவா அந்த அளவுக்கு அதன் மொபைல் மாடல்கள் இன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. லினோவாவின் மொபைல் வெற்றி வரிசையில் அடுத்து வெளிவந்திருப்பது லினோவா வைப் X (Lenovo Vibe X) ஆகும்.
இந்த மொபைலில் என்னென்ன இருக்குன்னு அப்படியே ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க 5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் கொரிலா கிளாஸூடன் வெளிவருதுங்க. மேலும் இதில் Quad-core Cortex A7 பிராஸஸர் 1.5 GHz இருக்குதுங்க மற்றும் 2 GB க்கு ரேம், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் என அனைத்தும் இதில் இருக்குதுங்க.
அடுத்து கேமராவ பாத்தா 13MP க்கும் பிரன்ட் கேமரா 5MP க்கும் இதுல இருக்குங்க கேமரா கிளாரிட்டியும் அப்ப நல்லா இருக்கும்னு எதிர்பாக்கலாம்ங்க. இதோட எடை 121 கிராம்ஸ் 2000mAh பேட்டரி கொடுத்திருக்காங்க மேலும் 16GB க்கு இன்பில்டு மெமரியும் இதுல இருக்குது என்பது மேலும் ஒரு கொசுறு தகவல்ங்க
இதோ விலை ரூ.82000ங்க.(இலங்கை)
எக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..
இன்று நோக்கியாவை தவிர அனைத்திலும் ஆண்ட்ராய்டு வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இன்று ஆண்ட்ராய்டு உலகை தன் வசம் வைத்துள்ளது. மொபைல் வாங்க செல்வோரின் முதல் தேர்வு அது ஆண்ட்ராய்டு மொபைல் தான் அது என்ன எந்த கம்பெனி மொபைலாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல் வேண்டும் என்று தான் மக்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் சோனியின் Xperia Z, ZL, ZR மற்றும் Xperia Tablet Z ஆகிய மொபைல்களை நீங்கள் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்கான ஆண்டராய்டு அப்டேட்டை சோனி தற்போது உங்களுக்கு வழங்குகிறது.
இந்த மொபைல்களில் எந்த வெர்ஷன் நீங்கள் வைத்திருந்தாலும் தற்போது நீங்கள் ஜெல்லி பீன் 4.3 க்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம் என்று இன்று அறிவித்துள்ளது சோனி. மேலும், இதை இன்றிலிருந்தே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது சோனி உங்ககிட்ட சோனி மொபைல் இருக்கா அப்ப உடனே அப்டேட் பண்ணுங்க ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷனை.
வெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2!
இன்றுமொபைல் உலகில் ஆப்பிளை காப்பி அடித்தாலும் தொடர்ந்து வெற்றிகள் பல குவித்து வரும் சாம்சங் இன்று புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. அதுதான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 ஆகும் ஏற்கனவே வெளியான கேலக்ஸி கிராண்ட் விற்பனையில் சக்கைபோடு போட்டது.
நேற்று வெளியிட்டுள்ள இந்த மொபைலில் ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும் மேலும் இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல். பிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும். மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான். மேலும் இதில் 1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது. இந்த மொபைலின் எடை 163 கிராமாகும், இதன் விலை ரூ.21,500 என சாம்சங் தீர்மானித்துள்ளது.




