Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label தொலைபேசி. Show all posts
Showing posts with label தொலைபேசி. Show all posts

உரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்தும் தொலைபேசி

மறு­பக்­கத்தில் உரை­யா­டலில் ஈடு­பட்­டுள்­ள­வரின் முப்­ப­ரி­மாணத் தோற்­றத்தை காட்­சிப்­ப­டுத்தி, அவ­ருடன் நேருக்கு நேர் சந்­தித்து உரை­யா­டு­வது போன்ற உணர்வைத் தரும் மாதிரி தொலை­பே­சியை எதிர்­வரும் வருட இறு­திக்குள் அறி­மு­கப்­ப­டுத்த போலந்து கம்­ப­னி­யொன்று நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளது.

article-2533850-1A5DEB7900000578-948_634x440

1977ஆம் ஆண்டு வெளி­யாகி வசூல் சாதனை படைத்த "ஸ்டார் வார்ஸ்" திரைப்­ப­டத்தின் கதாநாய­கியை குறிக்கும் வகையில் மேற்­படி கம்­ப­னிக்கு யெலிஸா டிஸ்­பிளே சிஸ்டம்ஸ் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.


article-2533850-1A6BBD2100000578-211_634x568




இந்த நிறு­வ­ன­மா­னது முப்­ப­ரி­மாண விம்ப உப­கரணங்­களை வெற்­றி­க­ர­மாக ஸ்தாபித்­த­தை­ய­டுத்து, அந்த தொழில்­நுட்­பத்தை உள்­ள­டக்­கிய மாதிரி தொலைபேசியை எதிர்­வரும் வரு­டத்­துக்குள் அறி­மு­கப்­ப­டுத்தவுள்­ளது.இந்தக் தொலை­பேசி எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பாவனைக்கு விடப்படவுள்ளது.

ஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ் போ ஒரெஞ்ச் கைய­டக்க தொலை­பேசி

இலங்கை மின் உதி­ரிப்­பாகம் மற்றும் கைய­டக்க தொலை­பேசி ஆகிய துறை­களில் புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நாட்டின் முன்­னிலை மின் உதி­ரிப்­பாக நிறு­வ­ன­மான ஒரெஞ்ச் முதற்­த­ட­வை­யாக அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­களை உள்­ள­டக்­கிய கைய­டக்க தொலை­பே­சி­களை சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.


2


ஹொங்­கொங்கில் அமைந்­துள்ள டெலி டோக் நிறு­வ­னத்­துடன் இணைந்து ஒரெஞ்ச் நிறு­வனம் இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ள­துடன் அதற்­கான வைபவம் கொழும்பு கல­தாரி ஹோட்­டலில் அண்­மையில் நடை­பெற்­றது.


“ எமது நிறு­வனம்் டெலி டோக் நிறு­வ­னத்­துடன் இணைந்து கைய­டக்க தொலை­பே­சி­களை மாத்­தி­ர­மன்றி மின் உதி­ரிப்­பா­கங்­க­ளையும் எதிர்­கா­லத்தில் உற்­பத்தி செய்யும். கைய­டக்க தொலை­பேசி, மின் உதி­ரிப்­பாகம் ஆகிய இரண்டு துறை­க­ளையும் ஒரே துறை­யாக மாற்­று­வதே எமது நோக்கம்” என ஒரெல் கோப்­ப­ரேஷன் நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் குஷான் கொடி­து­வக்கு தெரி­வித்தார்.


கலர் போ ஒரெஞ்ச் கைய­டக்க தொலை­பே­சிகள் X40, X 200, F 3, F 2, X110 ஆகிய வடி­வங்­களில் சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் மின்­சா­ர­முள்ள வீடு­க­ளி­லுள்ள மின் உப­க­ர­ணங்­களை கைய­டக்க தொலை­பேசி ஊடாக கட்­டுப்­ப­டுத்தக் கூடிய புதிய அப் (App) ஒன்­றையும் தமது நிறு­வனம் தயா­ரித்­துள்­ள­தாக ஒரெஞ்ச் நிறு­வ­னத்தின் கைய­டக்க தொலை­பேசி பிரிவின் பொது முகா­மை­யாளர் கிஹான் சிகேரா தெரி­வித்­துள்ளார்.


பாவ­னை­யா­ளர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்ள புதிய அப் மூலம் மின்­சார குமிழ்­களின் வெளிச்­சத்தை குறைத்தல், மின்­கு­மிழ்­களை எரிய வைத்தல், அணைத்தல், அலாரத்துக்கு அமைய மின் உபகரணங்களை எரியவிடுதல், வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் மின்குமிழ்கள் தானாக ஒளிர்வது உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இதன்மூலம் மேற்கொள்ளலாம்

Huaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­முகம் செய்யும் மொபிடெல்

ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தட­வை­யாக நாட்டில் அறி­முகம் செய்யும் சேவைகள் வரி­சையில்் இம்­முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்­துள்­ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்­போன்­க­ளுக்கு புதிய ஒப்­பந்த திட்டம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.


184141-1


மொபிடெல் வாடிக்­கை­யா­ளர்கள் இதற்­கென 18 மாத கால ஒப்­பந்தம் ஒன்றைச் செய்­து­கொள்ள வேண்டும். இந்த ஒப்­பந்தம் விஷேட பாவ­னைக்குப் பிந்­திய மொபிடெல் கட்­டண முறை­யொன்­றுடன் கூடி­யது. மாதாந்த அடிப்­ப­டையில் பின்­வரும் உள்­ளம்­சங்கள் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கி­றது. 2GB டேடா, 100 M2M நிமி­டங்கள் மற்றும் 500 M2M குறுந்­த­க­வல்கள் போன்­றன வழங்­கப்­படும். இந்த ஒப்­பந்­தத்தில் கையொப்­ப­மிடும் போது, ஆரம்பக் கட்­ட­ண­மாக ரூபா 10,000/- வைச் செலுத்த வேண்டும்.


ஒப்­பந்த கால முடிவில் வாடிக்­கை­யாளர் புதிய ஸ்மார்ட்­போனைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.


Huawei Ascend Y220 ஸ்மார்ட் போன் இரட்டை SIM பாவனை கொண்­டது. 3.5 அங்­குல தொடுகை திரை, 0.3MP சக்தி கொண்ட பின் பக்க கெமறா மற்றும்் RAM 256MB அதி உயர் நினை­வாற்றல், 512 MB ROM, நுண் SD கார்ட், (32G வரை) என­பன போன்ற பண்­பு­க­ளோடு கறுப்பு நிறத்தில் கிடைக்­கின்­றது.

அசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.

மொபைல் உலகில் மிக குறுகிய காலத்தில் சாம்சங்கின் முக்கிய போட்டியாளராக வந்துவிட்டது லினோவா அந்த அளவுக்கு அதன் மொபைல் மாடல்கள் இன்று மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. லினோவாவின் மொபைல் வெற்றி வரிசையில் அடுத்து வெளிவந்திருப்பது லினோவா வைப் X (Lenovo Vibe X) ஆகும்.


27-untitled


இந்த மொபைலில் என்னென்ன இருக்குன்னு அப்படியே ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க 5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைல் கொரிலா கிளாஸூடன் வெளிவருதுங்க. மேலும் இதில் Quad-core Cortex A7 பிராஸஸர் 1.5 GHz இருக்குதுங்க மற்றும் 2 GB க்கு ரேம், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் என அனைத்தும் இதில் இருக்குதுங்க.


அடுத்து கேமராவ பாத்தா 13MP க்கும் பிரன்ட் கேமரா 5MP க்கும் இதுல இருக்குங்க கேமரா கிளாரிட்டியும் அப்ப நல்லா இருக்கும்னு எதிர்பாக்கலாம்ங்க. இதோட எடை 121 கிராம்ஸ் 2000mAh பேட்டரி கொடுத்திருக்காங்க மேலும் 16GB க்கு இன்பில்டு மெமரியும் இதுல இருக்குது என்பது மேலும் ஒரு கொசுறு தகவல்ங்க


இதோ விலை ரூ.82000ங்க.(இலங்கை)




எக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..

இன்று நோக்கியாவை தவிர அனைத்திலும் ஆண்ட்ராய்டு வந்துவிட்டது எனலாம் அந்த அளவுக்கு இன்று ஆண்ட்ராய்டு உலகை தன் வசம் வைத்துள்ளது. மொபைல் வாங்க செல்வோரின் முதல் தேர்வு அது ஆண்ட்ராய்டு மொபைல் தான் அது என்ன எந்த கம்பெனி மொபைலாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல் வேண்டும் என்று தான் மக்கள் கூறுகின்றனர்.24-24-sonyrollsoutandroid4-3jellybeanupdatetoxperiazzlzrandxperiatabletz


அந்த வகையில் சோனியின் Xperia Z, ZL, ZR மற்றும் Xperia Tablet Z ஆகிய மொபைல்களை நீங்கள் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்கான ஆண்டராய்டு அப்டேட்டை சோனி தற்போது உங்களுக்கு வழங்குகிறது.

இந்த மொபைல்களில் எந்த வெர்ஷன் நீங்கள் வைத்திருந்தாலும் தற்போது நீங்கள் ஜெல்லி பீன் 4.3 க்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம் என்று இன்று அறிவித்துள்ளது சோனி. மேலும், இதை இன்றிலிருந்தே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது சோனி உங்ககிட்ட சோனி மொபைல் இருக்கா அப்ப உடனே அப்டேட் பண்ணுங்க ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷனை.


வெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2!

இன்றுமொபைல் உலகில் ஆப்பிளை காப்பி அடித்தாலும் தொடர்ந்து வெற்றிகள் பல குவித்து வரும் சாம்சங் இன்று புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. அதுதான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 ஆகும் ஏற்கனவே வெளியான கேலக்ஸி கிராண்ட் விற்பனையில் சக்கைபோடு போட்டது.


23-1387801820-23-1387790178-samsunggalaxygrand2launcheventphoto16


நேற்று வெளியிட்டுள்ள இந்த மொபைலில் ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும் மேலும் இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல். பிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும். மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.


இந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான். மேலும் இதில் 1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது. இந்த மொபைலின் எடை 163 கிராமாகும், இதன் விலை ரூ.21,500 என சாம்சங் தீர்மானித்துள்ளது.


 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger