Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி

இன்றுடன் முடியும் 2013 சிறந்த காமெடி நடிகனாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் பரோட்டா சூரி. கடந்த ஆண்டு நகைச்சுவை உலகை கட்டுக்குள் வைத்திருந்த நடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி, தனது பிரத்தியேக நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவரை கவிழ்பதற்கு சதி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


Parotta-Soori


சமீபகாலமாக சில படங்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதற்காக ரஜினி போன்ற சில மெகா நடிகர்களிடம் அப்படங்களைப்பற்றி கமெண்ட் வாங்கி அதை விளம்பரம் செய்கின்றனர்.


அதேபோல், விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்திற்கும் ரஜினியிடம் கருத்து கேட்டனர். இதற்கு வித்தியாசமான ஆக்சன் படம் என்று கருத்து சொல்லியிருந்தார்.


அதை அப்படத்தின் விளம்பரங்களில் பயன்படுத்தியிருந்தனர். இந்த சமயத்தில், காமெடி நடிகர் சூரியின் டுவிட்டரில், சிலர் மொக்கைப் படங்களையெல்லாம் பிரபலங்களை பார்க்க வைத்து, அவர்களிடம் ஆகா ஓகோவென்று அப்படங்களை பேச வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.


அதனால் அதை நம்பி தியேட்டர் பக்கம் போகாதீர்கள் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்ததாம். அவர், இவன் வேற மாதிரி படத்தைப்பற்றி ரஜினி சென்னதைதான் அப்படி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.


ஆனால், சூரிதரப்பு இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம், சூரி தன் பெயரில் டுவிட்டர் கணக்கே இதுவரை தொடங்கவில்லையாம். அதை பயன்படுத்த அவருக்கு நேரம்கூட இல்லையாம். அப்படியிருக்க வேறு யாரோதான் தன் பெயரில் இப்படி டுவிட்டர் ஆரம்பித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என்கிறார்கள்.


அதுவும் இப்போது நான் மார்க்கெட்டில் பிசியாக இருப்பதால் என் வளர்ச்சிக்கு ஏதாவது வகையில் சதி செய்ய வேண்டும் என்பதற்காக யாரோ விஷமிகள்தான் இப்படி அவதூறு பரப்பி என் பெயரை டேமேஜ் செய்துள்ளனர் என்று தன் நிலையை விளக்கியுள்ளார் சூரி.

மோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்

நடிகர் மோகன்பாபு, பிரமானந்தாவின் பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு மோகன்பாபு தயாரித்த 'தேனிகைனா ரெடி' என்ற திரைப்படைத்தில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோத்வானியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.





நகைச்சுவை படமான இதில் பிரபலமான நடிகர் பிரமானந்தாவும் நடித்து இருந்தார். இந்த படத்தில், பிரமாணர்களை மாமிசம் சாப்பிடுபவர்களாக காட்டி கேவலப்படுத்தியிருப்பதாக அப்போது போராட்டம் நடந்தது. மேலும் பட நன்மதிப்பிற்காக பத்மஸ்ரீ பட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா தலைவர் இந்திரசேனா ரெட்டி என்பவர் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.


downloadஇந்த மனுவை நேற்று நீதிபதிகள் கல்யாண் ஜோதி சென்குப்தா மற்றும் சஞ்சய்குமார் விசாரித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சர்ச்சைக்குரிய இந்த படத்தின் விளம்பரத்திற்காக பத்மஸ்ரீ பட்டத்தை நடிகர் மோகன்பாபுவும், பிரமானந்தாவும் தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது அந்த பட்டத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரும் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதுகுறித்த அடுத்த விசாரணை வரும் 30-ம் தேதி நடக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.






 

நடிகர் மயில்சாமியை பணம் கேட்டு மிரட்டிய மர்மநபர்...

tamil-caomedy-actor-mayilsamy-latest-stills-2_720_southdreamz


விருகம்பாக்கத்தில் நடிகர் மயில்சாமியை பணம் கேட்டு மிரட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூள், தில், வருஷமெல்லாம்வசந்தம், பட்டத்துயானை உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் மயில்சாமி. சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.


இவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த புகாரில், நேற்றுமுன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசியபோது, அதில் பேசிய மர்ம நபர் ‘நீங்கள் எனக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது விஷயங்களை வெளியே சொல்லிவிடுவேன்’ என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைச்சுவை நடிகர் மயில்சாமியிடம் செல்போனில் பணம் கேட்டு மிரட்டியது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மிரட்டல் வந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger